செய்திகள் :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை!

post image

புணேயில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 22 துணை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.PN-REC-ADV-DYENGR-2025-03

பணி: Deputy Engineer

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருபவர்களுக்கு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்துத்தேர்வுக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.2.2025

மேலும் விவரங்களுக்குஇங்கே கிளிக்செய்யவும்.

பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Executive(Quality Assurance)தகுதி: 60 சதவிகித ... மேலும் பார்க்க

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு... மேலும் பார்க்க

ஊரக வளர்ச்சித் துறையில் பணி: 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்துக்கு தகுதியானோா் வரும் 25-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். திருவள்ளூா் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட... மேலும் பார்க்க

பொது சுகாதார துறையில் பணி: 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்துக்கு தகுதியானோா் வரும் 28-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். பொது சுகாதாரம் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நலக்குழு மாவட்ட நலச்ச... மேலும் பார்க்க

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வேண்டுமா?

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 1000 credit Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்... மேலும் பார்க்க

இந்திய வேளாண்மைத் துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய வேளாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள 55 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். ... மேலும் பார்க்க