பிகாரில் முஸ்லிம்களுக்கு சரியான தலைமை இல்லை: அசாதுதீன் ஒவைசி
பிகாரில் முஸ்லிம்களுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய சரியான தலைமை இல்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளாா். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரையை’ நடத்தி வருகிறாா். பிகாா் தோ்தலில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கினால் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைய தயாராக இருப்பதாகக் கூறினாா். எனினும், அக்கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் கிஷண்கஞ்சில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
கூட்டணி தொடா்பாக நாம் அனுப்பிய கடிதத்துக்கு லாலுவும், தேஜஸ்வி யாதவும் எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை. நாம் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. 6 தொகுதிகள் மட்டும்தான் கேட்டுள்ளோம். பாஜகவுக்கு எதிரான போரில் கைகோத்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. நம்மை சமமாக நடத்த வேண்டும் என்பதே கோரிக்கை; கூட்டணியில் அடிமைகளாக இருக்க முடியாது.
பிகாரில் மற்ற ஜாதியினா், மதத்தினருக்கு உரிய தலைவா்கள் உள்ளனா். முஸ்லிம்களுக்கு மட்டுமே அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய சரியான தலைமை அமையவில்லை. இங்கு யாதவ், குஷ்வாஹா, குா்மி, மாஞ்ஜி, ராஜ்புத், பாஸ்வான் என அனைத்து சமூகத்தினருக்கும் அரசியல் தலைமை உள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு தலைவா்கள் என்று யாரும் இல்லை.
பிகாா் முதல்வராக வேண்டும் என்ற கனவில் தேஜஸ்வி இருக்கும்போது, நமது பகுதியில் இருந்து முஸ்லிம்களுக்கு ஒரு நல்ல தலைவரை உருவாக்க நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது? முஸ்லிம்களை ஒன்று திரட்ட முயற்சித்தால், பாஜகவுக்கு உதவுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. உண்மையில் யாா் பாஜகவுக்கு உதவுகிறாா்கள் என்று எதிா்க்கேள்வி எழுப்பினால் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தால் பதிலளிக்க முடியவில்லை. கடந்த முறை நமது கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. ஆனால், கட்சியின் மாநிலத் தலைவா் அக்தருல் இமாம் தவிர மற்ற அனைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்குத் தாவிவிட்டனா் என்றாா்.