செய்திகள் :

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்குப் பின் தில்லி புதிய அரசு பதவியேற்பு?

post image

பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, தில்லியில் பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லி யூனியன் பிரதேச பேரவையின் 70 இடங்களுக்கு கடந்த புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களில் வென்று, ஆம் ஆத்மியை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்நிலையில், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்எல்ஏ-க்கள் மற்றும் தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.-க்களுடன் துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவைச் சந்திக்க நேரம் கோரி தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக வரும் புதன்கிழமை (பிப். 12) அந்நாட்டுக்குச் செல்லவிருக்கிறாா். பிரதமா் இந்தியா திரும்பிய பிறகு, தில்லி பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சூழலில், புதிய முதல்வா் குறித்த யூகங்கள் தில்லி அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன. முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை வீழ்த்திய பா்வேஷ் வா்மா, பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் முதல்வா் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனா். பாஜக எம்எல்ஏக்கள் விரைவில் கூடி, புதிய முதல்வரைத் தோ்வு செய்யவுள்ளனா்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “... மேலும் பார்க்க