செய்திகள் :

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

post image

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இன்று தன்னுடைய 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவர் மட்டுமின்றி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

அசாதாராண தலைமைத் துவத்தின் கடின உழைப்பை எடுத்துக்காட்டி நாட்டிற்காக பெரிய இலக்குகளை விதைத்துள்ளீர்கள். நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும், உங்கள் தனித்துவமான தலைமையுடன், நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாகவும், கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும் பிரதமர் மோடிக்கு அவரது பிறந்தநாளில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக வாழ்வில் நாட்டு மக்களின் நலனுக்காக இடைவிடாமல், சோர்வடையாமல் அயராது உழைத்து வரும் மோடி, ஒவ்வொரு குடிமகனுக்கும் 'நாடுதான் முதன்மை' என்னும் உத்வேகமாக இருக்கிறார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிறந்தநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

உங்கள் தொலைநோக்கு தலைமையும், நாட்டிற்கான அர்ப்பணிப்பும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நமது நாட்டை வழிநடத்த தொடர்ந்து வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன்.

நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜ தலைவர்)

மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மனதில் நிறுத்தி மக்கள் சேவைக்கு தன் வாழ்வையே அர்பணித்து மூன்றாவது முறையாக பிரதமராக சிறப்பாக செயலாற்றும் மக்கள் தலைவன், எளிய பின்னணியில் பிறந்து எட்டுத்திக்கிலும் போற்றப்படும் சரித்திர நாயகர், தேசப்பற்றை மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்ட பெரும் தேசியவாதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் தாரக மந்திரத்துடன் பணியாற்றும் தன்னலமற்றவர், கடந்த பதினொரு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் பாரதத்தை சாதனைபுரியச் செய்த ஈடு இணையற்ற தலைவர், தாய்மொழியாக இல்லையென்றாலும் திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்பும் பற்றாளர் போன்ற எண்ணற்ற புகழ்களுக்குச் சொந்தக்காரரான நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் மேலும் பல்லாண்டு நமது பாரத தேசத்தை அவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நடிகர் ரஜினி

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நாட்டை வழிநடத்தும் வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்!

அண்ணாமலை (தமிழக பாஜ முன்னாள் தலைவர்)

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை முன்னேற்ற பாதையில் செல்ல வழிவகை செய்தது.

இந்தியாவை மேன்மேலும் பெருமையை நோக்கி அழைத்துச் செல்ல அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

Prime Minister Modi's birthday: Leaders wish him well!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் ... மேலும் பார்க்க

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃ... மேலும் பார்க்க

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட... மேலும் பார்க்க

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்... மேலும் பார்க்க