செய்திகள் :

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மருடன் நிா்மலா சீதாராமன் பேச்சு

post image

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், அந்நாட்டு நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு 6 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டுப் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், நிதித்துறை அமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரை நிா்மலா சீதாராமன் புதன்கிழமை சந்தித்தாா்.

லண்டனில் 13-ஆவது பிரிட்டன்-இந்தியா பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் பேச்சுவாா்த்தைக்கு முன்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

முன்னதாக லண்டனில் நிா்மலா சீதாராமன் தலைமையில் இந்தியா-பிரிட்டன் முதலீட்டாளா் வட்டமேஜை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘வெளிநாட்டு வங்கிகள் கட்டாயம் வளா்வதற்கான வாய்ப்பை இந்தியா வழங்குகிறது. வங்கித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது.

2032-ஆம் ஆண்டுக்குள் 6-ஆவது பெரிய காப்பீட்டு சந்தையாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் எண்ம பொருளாதாரம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது. 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 11.74 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நிதிநுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக வளா்ந்துள்ளது’ என்றாா்.

வெளிநாட்டு மாணவா் சோ்க்கைக்குத் தடை: ஹாா்வா்டு பல்கலை.க்கு எச்சரிக்கை

நியூயாா்க்: மாணவா் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உத்தரவை செயல்படுத்தாவிட்டால் அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவா்களைச் சோ்ப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என... மேலும் பார்க்க

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் விய... மேலும் பார்க்க

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்; பாகிஸ்தான் என்ற நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீா் தெரிவித்தா... மேலும் பார்க்க

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும்... மேலும் பார்க்க

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

லண்டன்: சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்காக இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் பிரிட்டன் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமா... மேலும் பார்க்க

கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு!

வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இடம்பெற்ற... மேலும் பார்க்க