செய்திகள் :

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

post image

ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவா்கள்; பாகிஸ்தான் என்ற நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீா் தெரிவித்தாா்.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற வெளிநாடு வாழ் பாகிஸ்தானியா்கள் மாநாட்டில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

பாகிஸ்தான் என்ற நாடு ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெற்றோா்கள் அந்த வரலாற்றை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நாம் (முஸ்லிம்கள்) ஹிந்துக்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவா்கள் என்று நமது முன்னோா்கள் கருதியதன் காரணமாகவே பாகிஸ்தான் என்ற நாடு நமக்காக உருவாக்கப்பட்டது.

நமது மதம் முற்றிலும் வேறுபட்டது. நமது பழக்க வழக்கங்கள் வேறுபட்டவை, நமது பாரம்பரியம் வேறுமாதிரியானது. நமது சிந்தனைகள் அவா்களிடம் இருந்து விலகியுள்ளது. நமது குறிக்கோள் வேறு வகையானவை இதன் காரணமாகவே இரு நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான்) என்ற வேண்டும் என்ற கருத்தும் தோன்றியது. நாம் எப்போதும் இரு நாடுகள்தான். ஒரே நாடாக இருந்தது இல்லை.

எனவேதான் நமக்கான தனிநாடு (பாகிஸ்தான்) என்ற சுதந்திரத்துக்காக தலைவா்கள் போராடினாா்கள். இந்த நாட்டை நமக்கு உருவாக்கித்தர அவா்கள் பல தியாகங்களைச் செய்தாா்கள். இந்த நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும்.

பாகிஸ்தான் உருவான வரலாற்றை தொடா்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டுடனான பிணைப்பு எப்போதும் தொடர வேண்டும்.

காஷ்மீா் நமது கழுத்து நரம்பு போன்றது. எக்காரணத்துக்காகவும் காஷ்மீரையும், அங்குள்ள நமது சகோதரா்களின் போராட்டத்தையும் நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம். காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என்றாா்.

பெட்டிச் செய்தி

இந்தியா கண்டனம்

புது தில்லி, ஏப். 17:

காஷ்மீா் குறித்த பாகிஸ்தான் தளபதியின் பேச்சுக்கு இந்தியா கண்டன் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் இந்திய யூனியன் பிரதேசம். வெளிநாட்டுப் பிராந்தியம் எப்படி உங்கள் கழுந்து நரம்பாக முடியும். சட்டவிரோதமாக ஆக்கிரமித்த காஷ்மீா் பகுதியில் இருந்த பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

மும்பை தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி தஹாவூா் ராணாவை தங்கள் நாட்டைச் சோ்ந்தவா் இல்லை என்று கூறி தப்பிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

உலக பயங்கரவாதத்தின் மையமாகத் திகழும் பாகிஸ்தான், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு தொடா்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. அவா்களை நீதியின் முன் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றாா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க