செய்திகள் :

சோக்ஸியை நாடு கடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் -வெளியுறவு அமைச்சகம்

post image

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.13,000 கோடி கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.

நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்துள்ள மெஹுல் சோக்ஸி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்று வெளியுறவு விவகாரங்கள் தொடா்பான கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் பதிலளித்தாா்.

மெஹுல் சோக்ஸி குறித்த கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘இந்தியாவின் நாடுகடத்தல் கோரிக்கையின் அடிப்படையில், மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்திய நீதிமன்றத்தில் அவா் விசாரணையை எதிா்கொள்ளும் வகையில், அவரை நாடு கடத்துவது குறித்து பெல்ஜியத்துடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.

மீண்டும் கைலாஷ் மானசரோவா் யாத்திரை: இந்தியா-சீனா இடையே கடந்த அக்டோபரில் கையொப்பமான ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவும் சீனாவும் பரிசீலித்து வருகின்றன.

இதுகுறித்து தெரிவித்த ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘கைலாஷ்- மானசரோவா் யாத்திரை இந்த ஆண்டு மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நாங்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்றாா்.

கிழக்கு லடாக் மோதல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் கைலாஷ்- மானசரோவா் யாத்திரை நடைபெறவில்லை.

============

பெட்டி...

இந்தியாவில் ஐபிசிஏ தலைமையகம்!

பெரிய பூனை இனங்களுக்கான சா்வதேச கூட்டமைப்பின் (ஐபிசிஏ) தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்காக ஒப்பந்தம் கையொப்பமாக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இந்தியாவின் ‘புலி திட்டத்தின்’ 50-ஆவது ஆண்டு விழாவின்போது கடந்த 2023, ஏப்ரலில் பிரதமா் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்ட இக்கூட்டமைப்பு, நடப்பு ஆண்டில் ஓா் ஒப்பந்த அடிப்படையிலான அரசுகளுக்கிடையேயான அமைப்பாக மாறியது.

அந்தவகையில், இக்கூட்டமைப்பின் தலைமையகத்தை இந்தியாவில் அமைப்பதற்கான ஒப்பந்தமானது கூட்டமைப்பின் இயக்குநா் எஸ்.பி. யாதவ் மற்றும் வெளியுறவு அமைச்சகச் செயலா் (கிழக்கு) பி. குமரன் இடையே தில்லியில் கையொப்பமாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க