சென்னை உயர்நீதிமன்றத்தில் டெக்னிக்கல் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதிய தொடரில் இருந்து விலகிய கண்மணி மனோகரன்!
புதிய தொடரான ராகவி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.
இத்தொடரில் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு, தேஜஷ்வினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாணி ராணி தொடரில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண்குமார் - நீலிமா ஜோடி இத்தொடரில் பிரதானப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ராகவி தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமான கண்மணி மனோகரன் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
முன்னதாக, கண்மணி மனோகரன் மகாநதி தொடரில் இருந்து விலகிய நிலையில், ராகவி தொடரில் இருந்தும் விலகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகவி தொடரில் கண்மணி மனோகரனுக்குப் பதிலாக நடிக்கவுள்ள நடிகை யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.