செய்திகள் :

புதிய தொடரில் இருந்து விலகிய கண்மணி மனோகரன்!

post image

புதிய தொடரான ராகவி தொடரில் இருந்து கண்மணி மனோகரன் விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ராகவி எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் நடிகை கண்மணி மனோகரன் நடிக்கவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.

இத்தொடரில் சுந்தரி தொடர் பிரபலம் ஜிஷ்ணு, தேஜஷ்வினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாணி ராணி தொடரில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண்குமார் - நீலிமா ஜோடி இத்தொடரில் பிரதானப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ராகவி தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமான கண்மணி மனோகரன் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

முன்னதாக, கண்மணி மனோகரன் மகாநதி தொடரில் இருந்து விலகிய நிலையில், ராகவி தொடரில் இருந்தும் விலகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகவி தொடரில் கண்மணி மனோகரனுக்குப் பதிலாக நடிக்கவுள்ள நடிகை யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கில் சீனாவின் ரகசிய காவல் நிலையம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சீனாவின் ரகசிய காவல் நிலையத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்கர், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சீன வம்சாவளியைச் சேர்ந்த சென் ஜின்பிங் (வயது-60) மற்... மேலும் பார்க்க

எங்கே பழனிசாமி? அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா?: அமைச்சர் ரகுபதி

யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கேள... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் புதிய மற்றும் முட... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வலியுறுத்தியும் பைக் டாக்சி விவகாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியதை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்... மேலும் பார்க்க

பூடானில் இந்திய கல்வியாளருக்கு ராஜ மரியாதை!

பூடான் நாட்டில் இந்திய கல்வியாளர் அருண் கபூருக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் ராஜ மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பூடான் மற்றும் ஒமன் ஆகிய நாடுகளில் கல்வி நிலையங்களை நிறுவிய இந்தியாவைச் சேர்ந்த புக... மேலும் பார்க்க