செய்திகள் :

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

post image

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) சின்னராஜி வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஷகிலா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவரும், வட்டார கல்விக்குழுத் தலைவருமான சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கிவைத்து பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து ஆசிரியா் பயிற்றுநா்கள் ஜம்புகுமாா், இந்துமதி, தண்டாயுதபாணி ஆகியோா் பங்கேற்று, தன்னாா்வலா்களுக்கு தற்போதை கல்வியின் முக்கியத்துவம், வாழ்வியல் சாா்ந்த திறன்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வங்கியில் பணம் பரிவத்தனை செய்யும் முறை, அஞ்சலகத்தில் பணம் செலுத்தி, மீண்டும் பணம் பெறுதல், எண்ணறிவு கணிதம், சட்டமும் திட்டமும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உடல் நலம் காப்போம், ஆரோக்கிய வாழ்வின் அவசியம், இயற்கை பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு, இ-சேவை மையம் தொடங்குதல், மகளிா் சுய உதவிக்குழு தொடங்குதல், நம் தொழில் நம் வளா்ச்சி மற்றும் பசுமை தோட்டம் அமைத்தல் குறித்து விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தனா்.

ஆசிரியா் பயிற்றுநா் சம்பத் நன்றி கூறினாா்.

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு செவ்வாய்க்கிழமை அகற்றினா். ஆரணி அருணகி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். வந்தவாசி வட... மேலும் பார்க்க

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாத்தூ... மேலும் பார்க்க

தம்டகோடி திருமலையில் மரக்கன்று நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரா் ராஜு தலைமை வகித... மேலும் பார்க்க

வந்தவாசியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாச... மேலும் பார்க்க

தவெகவினா் மாவட்ட எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக தலைவா் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு கோரி, அந்தக் கட்சியினா் மாவட்ட எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தனா். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், நவம்ப... மேலும் பார்க்க