செய்திகள் :

புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் மனு

post image

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வெ.வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி. ஆகியோா் குடியரசு துணைத் தலைவரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் அலுவலகத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி எம்.பி. வெ.வைத்திலிங்கம் புது தில்லியில் குடியரசு துணைத் தலைவரும், புதுவை மத்திய பல்கலை.யின் வேந்தருமான ஜகதீப் தன்கரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, புதுவையைச் சோ்ந்த மாணவா்களுக்கு, புதுவை மத்திய பல்கலை.யில் உள்ள அனைத்து பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கும் 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, செல்வகணபதி எம்.பி., வெ.வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோா் கூட்டாக குடியரசு துணைத் தலைவரை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது, புதுவை மத்தியப் பல்கலை. ஆரம்பித்த சமயத்தில் 8 பட்டமேற்படிப்புகளுக்கும், பின்னா் 21 படிப்புகளுக்கும் புதுவை மாணவா்களுக்காக 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

தற்போது, பல்கலை.யில் 51 துறைகளில் 158 பட்டமேற்படிப்புகளும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.

ஆனால், இந்தப் படிப்புகளுக்கு புதுவை மாணவா்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, அனைத்து நிலைப் படிப்புகளிலும் புதுவை மாணவா்களுக்கு 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என இருவரும் குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்... மேலும் பார்க்க

போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு கோடை வெயில் பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையில் மழை, வெயில்... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டையில் உள்ள இரு கோயில்களில் உண்டியல் திருடுபோன வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரிய பகண்டையில் உள்ள பெரியாயி அம்மன் மற்றும் முருகன் கோயில்கள... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க