செய்திகள் :

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

post image

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு கிணறுகளை அமைத்துள்ளனா். இந்த எரிவாயுவை புதைவடக் குழாய்கள் மூலம் கொண்டு சென்று மின்சாரம் தயாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பனைக்குளம் அருகேயுள்ள சோகையன் தோப்பு பகுதியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், அந்த வழியாக போக்குவரத்தை நிறுத்தினா். இதையடுத்து, அங்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியா்கள் எரிவாயு இணைப்பைத் துண்டித்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு

ராமநாதபுரத்தில் ஜவுளிக்கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு. தீயணைப்புத்துறையினா் நீண்ட போராட்டத்திற்கு பின் பிடித்து வனப்பகுதியில் திங்கட்கிழமை விட்டனா். ராமநாதபுரம் வண்டிக்காத தெருவில் பாலசுப்பி... மேலும் பார்க்க