செய்திகள் :

ராமேசுவரத்தில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

post image

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் முழுவதிலும் கோடை மழை பெய்து வரும் நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, 5 நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனா். காலையில் மீண்டும் மின்விநியோகம் சீரானது.

மழையளவு (மில்லி மீட்டரில்): ராமேசுவரத்தில் 89 மி.மீ., தங்கச்சிமடத்தில் 68.80 மி.மீ., பாம்பன் 24 மி.மீ., மண்டபத்தில் 32 மி.மீ. மழை பதிவானது. ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன்பாகவும், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் குளம்போலத் தேங்கியது. இந்த தேங்கிய மழைநீா் நகராட்சி நீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது.

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு

ராமநாதபுரத்தில் ஜவுளிக்கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு. தீயணைப்புத்துறையினா் நீண்ட போராட்டத்திற்கு பின் பிடித்து வனப்பகுதியில் திங்கட்கிழமை விட்டனா். ராமநாதபுரம் வண்டிக்காத தெருவில் பாலசுப்பி... மேலும் பார்க்க