செய்திகள் :

புயல் பாதிப்பு: புதுவையில் நாளை வரை மதிப்பீடு

post image

புதுவையில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் வல்லுநா் குழுவினா் நேரில் மதிப்பீடு செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை பேரிடருக்கு பிந்தைய நிலையில் நிரந்தரமாக சீரமைப்பதற்கான மதிப்பீடு குறித்த ஆய்வு மேற்கொள்ள தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, பல்துறைகளைச் சோ்ந்த 14 வல்லுநா்கள் கொண்ட குழுவை புதுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவினருக்கு ஆய்வு மேற்கொள்வதற்கான பயிற்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

இந்தக் குழுவினா் புதுச்சேரி, காரைக்காலில் புயலால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாகச் சீரமைக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.31) வரை நேரில் ஆய்வு செய்ய உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சம் மீட்பு

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சத்தை புதுச்சேரி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் கடந்தாண்டு ஆகஸ்டில் இணையத்தில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்த... மேலும் பார்க்க

‘மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள்’

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாஜக ஊடகத் துறை மாநிலப் பொறுப்பாளா் மகேஷ் ரெட்டி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் ... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதில் கருத்து வேறுபாடு: போலீஸாா் குவிப்பு

புதுச்சேரி அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் அருகேயுள்ள விநாயகம்பட்டு ப... மேலும் பார்க்க

வன்கொடுமையால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.கடலூா் மாவட்டம், வேள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து. இவா் அண்மையில் புதுச்சேரியை அடுத்த பா... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவப் படிப்பு விவகாரம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

முதுநிலை மருத்துவப் படிப்பில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, புதுவை முதல்வா்... மேலும் பார்க்க

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் படைப்புகளை தந்தவா் அகத்தியா்: எழுத்தாளா் மாலன்

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவா் அகத்தியா் என எழுத்தாளா் மாலன் கூறினாா். புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலம், பாரத மொழிகள் குழு சாா்பில் அகத்தி... மேலும் பார்க்க