புரி ஜெகந்நாதர் நீராட்டு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதரின் நீராட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பத்து நாள்கள் நடைபெறவிருக்கும் தேர்த் தேர்விழா ஜூன் 27ல் தொடங்குகிறது. மூன்று தேர்கள் புரியின் வீதிகளில் உலா வர இருக்கின்றன. ஜெகந்நாதரின் ரத யாத்திரைக்கு முன்னதாக நீராட்டு திருவிழா நடத்தப்படுகிறது.
தேவ ஸ்நான பூர்ணிமா என்று அழைக்கப்படும் இந்த விழா ஆவணி மாதத்தில் பௌர்ணமி அன்று மரச் சிலைகள் கருவறையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு நீராடும் சடங்குகளுக்காக வைக்கப்படுகிறது. அந்தவகையில், இன்று நடைபெற்ற நீராட்டு விழாவில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்திரை ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகளும் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கோயிலின் நீராட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டது. இந்த நாளை ஜெகந்நாதரின் பிறந்தநாளாகவும் கருதப்படுகிறது.
வேத மந்திரங்கள் ஓதப்படும் வேளையில், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கிணறிலிருந்து 108 குடம் புனித நீர் எடுத்து சிலைகள் மீது ஊற்றப்படும். மேலும் சிலைகளைச் சடங்கு ரீதியாக துடைத்து, யானையின் உடை கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இதையடுத்து இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நீராட்டு நிகழ்ச்சியைக் காண ஒவ்வொரு வருடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது வழக்கமாகும். இதையடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.