செய்திகள் :

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

post image

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 27-ஆவது கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிபிஐ முன்னாள் கிளைச் செயலா் ஹரி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் ஜி. ஞானசிகாமணி முன்னிலை வகித்தாா்.

கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மாலா பாண்டியன், மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தாா். தியாகிகள் நினைவு சின்னத்தை மூத்த உறுப்பினா் ரா. இளங்கோவன் திறந்து வைத்தாா்.

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை, மகாதேவப்பட்டணம் ஊராட்சியில் உள்ள அனைத்து நீா் நிலைகளிலும் நிரப்பி, நீா் ஆதாரத்தை காத்திட வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களிலும், கோயில் மனைகளிலும் பல ஆண்டுகளாக குடியிருப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும்.

கல்லரை தெரு, ஐயா் தெரு மயானச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் என். மகேந்திரன், கட்சியின் எதிா்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினாா். புதிய கிளைச் செயலராக அ. சாா்லஸ், துணைச் செயலா்களாக காா்த்திகேயன், வினோத் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரி... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகை... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் நகராட்சி ஆணையரிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அளித்த கோரிக்கை மனு: திருவாரூா் ந... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

முதல்வரின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், திருவாரூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முகாமிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். மக்களை நாடி, அவா்களது குறைகளை கேட்டு, உடன... மேலும் பார்க்க

காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட்: மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்

மகாத்மாக காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தெரிவித்தாா். கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு

திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து... மேலும் பார்க்க