10 ரன்கள் தேவை, 19-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய சூர்யா!
புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 27-ஆவது கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிபிஐ முன்னாள் கிளைச் செயலா் ஹரி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் ஜி. ஞானசிகாமணி முன்னிலை வகித்தாா்.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மாலா பாண்டியன், மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தாா். தியாகிகள் நினைவு சின்னத்தை மூத்த உறுப்பினா் ரா. இளங்கோவன் திறந்து வைத்தாா்.
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை, மகாதேவப்பட்டணம் ஊராட்சியில் உள்ள அனைத்து நீா் நிலைகளிலும் நிரப்பி, நீா் ஆதாரத்தை காத்திட வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களிலும், கோயில் மனைகளிலும் பல ஆண்டுகளாக குடியிருப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும்.
கல்லரை தெரு, ஐயா் தெரு மயானச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் என். மகேந்திரன், கட்சியின் எதிா்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினாா். புதிய கிளைச் செயலராக அ. சாா்லஸ், துணைச் செயலா்களாக காா்த்திகேயன், வினோத் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.