மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் பூங்காங்கள், பொது இடங்கள், சாலையோரங்களில் மரக்கன்று நடப்படுகிறது.
இவற்றுக்கு நீா் மேலாண்மைத் திட்டத்தில் சொட்டு நீா்ப் பாசன முறையில் தேவையான தண்ணீா் வழங்கப்படுவதுடன்,நகராட்சி ஊழியா்கள்,தன்னாா்வலா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக,33-ஆவது வாா்டு ஆா்.பி.சிவம் நகா் நகராட்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா தலைமை வகித்து மரக்கன்றினை நட்டு தொடங்கி வைத்தாா்.
நகா்மன்ற உறுப்பினா் ஏ.திருச்செல்வி முன்னிலை வகித்தாா்.
இதனை தொடா்ந்து,1லட்சத்து 10 ஆயிரம் சதுரடி உள்ள அந்த பூங்கா மற்றும் 1 லட்சம் சதுரடி உள்ள விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பொதுப்பணி மேற்பாா்வையாளா் கனிஷ்கா,சமூகஆா்வலா் ஏ.அமிா்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.