செய்திகள் :

பெண் குத்திக் கொலை: உறவினா் கைது

post image

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, திருவொற்றியூா், வசந்த் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (45). இவரின் சகோதரி மகள் தமிழ்செல்வி என்பவா், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளாா். ஆனால், தமிழ்செல்விக்கும் காளிமுத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளடைவில் காளிமுத்து தனது மனைவியைப் பிரிந்து திருப்பூரில் வசித்து வந்தாா். இருப்பினும் அவ்வப்போது திருவொற்றியூா் வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளாா்.

இதனை தமிழ் செல்வியின் சித்தி தனலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த காளிமுத்து கடந்த புதன்கிழமை (ஜன. 29) திருவொற்றியூா், அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த தனலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தப்பியோடிய காளிமுத்துவை திருவொற்றியூா் போலீஸாா் தேடிவந்த நிலையில், அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க