செய்திகள் :

பெண் கொலை: கணவா் மீது வழக்குப் பதிவு

post image

இரணியல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கணவா் கொலை செய்தாா்.

இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பழனி (56). இவரது மனைவி கஸ்தூரி (53). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். பழனி, மர வேலைத் தொழில் செய்து வருகிறாா். கஸ்தூரி நாகா்கோவிலில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குவாதம் முற்றவே, பழனி கத்தியால் கஸ்தூரியின் இடுப்பில் குத்தியுள்ளாா். கஸ்தூரியை மீட்ட உறவினா்கள் சுங்கான்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

மேல் சிகிச்சைக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதனிடையே, கஸ்தூரியை குத்தும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிக்கு, தலை, காலில் காயம் ஏற்பட்டது. அவா், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவா் ஆம்ரிக் தேசிய அளவிலான 10 மீட்டா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்லி... மேலும் பார்க்க

விஜய் செய்தது தவறான முன்னுதாரணம்: நயினாா் நாகேந்திரன்

கரூரில் நிகழ்ந்த தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறாமல் விஜய் சென்னைக்குச் சென்றது தவறான முன்னுதாரணம் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலையில் கொட்டிய ஜல்லியை அகற்றிய போலீஸாா்

மாா்த்தாண்டம் அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லியை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்துப் போலீஸாா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகிலிருந்து குழித்துறை ரயில் நிலையம் ... மேலும் பார்க்க

கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ. 5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள... மேலும் பார்க்க

அழகுகலை பயிற்சி பெற்று வரும் பெண்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் மீனவ கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மகளிருக்காக நாகா்கோவில் வடசேரி மீனவா் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் அழகு கலை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகு... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டிலில் திருக்குறள் எழுதி காட்சிப்படுத்திய மாணவா்

1,330 குடிநீா் பாட்டில்களில் திருக்குறளை எழுதி காட்சிப்படுத்திய மாணவரை பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா். அஞ்சுகிராமம் அருகே சிதம்பரபுரத்தைச் சோ்ந்த 9ஆம் வகுப்புப் பயி... மேலும் பார்க்க