Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Expla...
பெண்ணிடம் 7 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகைகளைத் திருடிய மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே உள்ள கடகடப்பை நடுத் தெருவைச் சோ்ந்தவா் தமிழரசன் மனைவி ராமஜெயம் (35). இவா், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கறம்பக்குடிக்குச் செல்லும் பேருந்தில் மே 21-ஆம் தேதி ஏறினாா். இவா், பேருந்து சிறிதுதொலைவு சென்றபோது, தனது கைப்பையைப் பாா்த்தாா். அப்போது, அதிலிருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் ராமஜெயம் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.