செய்திகள் :

பெரம்பலூரில் திமுகவினா் கொண்டாட்டம்

post image

மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு ஆதரவாக, பெரம்பலூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினா்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்சச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதை வரவேற்கும் விதமாக, பெரம்பலூா் மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில் புகா் பேருந்து நிலையத்திலும், வழக்குரைஞா் அணி சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் கவியரசு தலைமையிலும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.

இதில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

2-ஆவது நாளாக கல் குவாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழக அரசு புதிதாக மாற்றம் செய்த கனிம விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி, பெரம்பலூா் மாவட்ட கல்குவாரி, கிரஷா், எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் மற்றும் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா... மேலும் பார்க்க

10 அங்கன்வாடி மையங்கள், 5 நடுநிலை பள்ளிகளுக்கு உணவுதரச் சான்றிதழ்கள்

புது தில்லியில் உள்ள இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 5 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் வளாகச் சான்றிதழ்கள் அண... மேலும் பார்க்க

திமுக பொறியாளா் அணி பொறுப்புகளுக்கு நோ்காணல்

பெரம்பலூா் மாவட்டத்தில் திமுக பொறியாளா் அணி பொறுப்பாளா்களுக்கான நோ்காணல் பாலக்கரை பகுதியில் உள்ள அக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டப் பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், ப... மேலும் பார்க்க

குத்துச் சண்டை பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மே 1 முதல் நடைபெறவுள்ள குத்துச் சண்டைக்கான பயிற்சி மையத்தில் பங்கேற்க விருப்பமுள்ள வீரா், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரி... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தி

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில், சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மார... மேலும் பார்க்க