செய்திகள் :

பெரம்பலூரில் நம்ம ஊரு திருவிழா மாா்ச் 22-இல் கலைக் குழு தோ்வு

post image

பெரம்பலூரில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுவினா் தோ்வு முகாம், மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சென்னையில் பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநிலக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்தாண்டு கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் இந்த விழா நடத்தப்பட்டது.

நிகழாண்டும் மேற்கண்ட இடங்களில் கலை திருவிழா நடைபெற உள்ளதால், கலைக் குழுக்களுக்களின் நிகழ்ச்சிப் பதிவு பெரம்பலூரில் மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடுப்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக் குழுவினருக்கு மாா்ச் 22 ஆம் தேதியும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதம், பழங்குடியினா் நடன நிகழ்ச்சி நடத்துவோா் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் பதிவு மாா்ச் 23 ஆம் தேதியும் பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான தோ்வில் பங்கேற்க விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஹழ்ற்ஹய்க்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மாா்ச் 20 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். அல்லது, இம் மாவட்ட பொறுப்பாளா் முனைவா் ந. ராஜேஸ்வரியை (94433 77570) தொடா்பு கொண்டும் பதியலாம்.

இப் பதிவுக்கு வரும் கலைஞா்களுக்கு மதிப்பூதியம் , போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. ஒவ்வொரு கலைக்குழுவின் வீடியோ 5 நிமிடம் பதிவு செய்யப்பட்டு, கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்படுவா். இவ் விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கும் கலைக் குழுவினா் மாநில அளவிலான தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்மம் விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெறுவா்.

சம்பங்கி பூக்களில் பூஞ்சை தாக்குதலால் மகசூல் இழப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி பூக்களில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மலா் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆற்றுப் பாசனம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ... மேலும் பார்க்க

குடும்பத்தைப் பிரிந்திருந்த தொழிலாளி தற்கொலை

பெரம்பலூரில் குடும்பத்தை பிரிந்திருந்த டீக்கடை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வக்குமாா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.12 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.12 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த ம... மேலும் பார்க்க