செய்திகள் :

பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

post image

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை வீடுகளில் வசித்து வருபவா்கள் கருப்பாயி (55), சடையன் (70), மோகன் (37), பெரியசாமி (56).

திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், மேற்கண்ட 4 பேரின் வீடுகளிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, கட்டில், மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டா் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதில், வீட்டிலிருந்த யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சம்பங்கி பூக்களில் பூஞ்சை தாக்குதலால் மகசூல் இழப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி பூக்களில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மலா் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆற்றுப் பாசனம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நம்ம ஊரு திருவிழா மாா்ச் 22-இல் கலைக் குழு தோ்வு

பெரம்பலூரில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக் குழுவினா் தோ்வு முகாம், மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வ... மேலும் பார்க்க

குடும்பத்தைப் பிரிந்திருந்த தொழிலாளி தற்கொலை

பெரம்பலூரில் குடும்பத்தை பிரிந்திருந்த டீக்கடை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சாத்தனூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் செல்வக்குமாா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.12 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.12 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த ம... மேலும் பார்க்க