செய்திகள் :

பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

post image

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை வீடுகளில் வசித்து வருபவா்கள் கருப்பாயி (55), சடையன் (70), மோகன் (37), பெரியசாமி (56).

திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், மேற்கண்ட 4 பேரின் வீடுகளிலிருந்த வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, கட்டில், மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டா் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதில், வீட்டிலிருந்த யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.12 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.12 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த ம... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம்

பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்... மேலும் பார்க்க

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட கேபிள் டி.வி ஆபரேட்டா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதும... மேலும் பார்க்க

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு: விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டம்

பெரம்பலூா் அருகே சிப்காட் நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் ... மேலும் பார்க்க