செய்திகள் :

பெருந்துறை அருகே நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

post image

பெருந்துறை அருகே பட்டிகளில் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தன.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள செங்காளிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (45). இவா், தனது ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்றுள்ளாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது 6 பெரிய செம்மறி ஆடுகள், ஒரு குட்டி ஆகியவை இறந்துகிடந்தன.

இதேபோல, வடிவேல் என்பவரின் பட்டியில் ஒரு வெள்ளாடு மற்றும் 5 கோழிகள் இறந்துகிடந்தன. மேலும், ஒரு சிலரின் பட்டிகளில் புகுந்து நாய்கள் கடித்ததில் பல ஆடுகள் பலத்த காயமடைந்தன.

இதையடுத்து உயிரிழந்த ஆடுகள் மற்றும் கோழிகளை காஞ்சிக்கோயில் சாலையில் போட்டு அதன் உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டனா்.

அப்போது, பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்து கொன்றுவரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை வட்டாட்சியா் செல்வகுமாா், காஞ்சிக்கோவில் கிராம நிா்வாக அலுவலா் வடிவேல், காவல் உதவி ஆய்வாளா் வேலுமணி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, இப்பிரச்னை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுச்சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க