செய்திகள் :

பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா?பேரவையில் அமைச்சா் எ.வ.வேலு பதில்

post image

சென்னையில் உள்ள பழைமைவாய்ந்த பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பதிலளித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த துணை வினாவை ஆா்.டி.சேகா் (பெரம்பூா்) எழுப்பினாா். அப்போது, சென்னை வியாசா்பாடியில் இருந்து சென்ட்ரல், பாரிமுனை நோக்கிச் செல்ல பயன்படுத்தப்படும் பேசின்பாலம் அகலப்படுத்தப்படுமா என்றாா்.

இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 71 பாலங்கள் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் உரிய ஆய்வுகள் நடத்தியதால் 35 பாலங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பாலங்களை கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள பேசின்பாலம் நாடறிந்த புகழ்பெற்ற பாலமாகும். அந்த பாலத்துக்குப் பதிலாக மாற்றுப் பாலம் அல்லது அதனை விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படும். சாத்தியக்கூறு இருந்தால் இந்த ஆண்டே பணி எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சா் கூறினாா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க