Retro Audio Launch: "அசால்ட் சேது கேரக்டர நான் பண்றேன்னு சொன்னேன்" - கலகலப்பாக ப...
பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கத்தினா் ஆலோசனை
திருப்பூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே 20-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் பி.என்.சாலையில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:
மத்திய அரசு 3-ஆவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊதிய குறைப்பு, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் காா்ப்பரெட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செய்து வருகிறது.
குறிப்பாக தொழிலாளா்கள் போராடிப் பெற்ற 44 சட்டத் தொகுப்புகளை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்து ஒட்டுமொத்த தொழிலாளா்களையும் நவீன கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறது. ஆகவே, தொழிலாளா் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20-ஆம் தேதி நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் முழுமையாக வேலைநிறுத்தம் நடைபெற 50 மையங்களில் சுவா் விளம்பரம் செய்வது, ஏப்ரல் 25-ஆம் வேலைநிறுத்த தயாரிப்பு மாநாடு நடத்துவது, மே 3-ஆம் தேதி அனைத்து முதலாளி சங்கங்களுக்கும் வேலைநிறுத்தம் குறித்து நோட்டீஸ் அளிப்பது, மாவட்டம் முழுவதும் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜீ.சம்பத், எல்பிஎஃப் மாவட்ட துணைத் தலைவா் ரெங்கசாமி, ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் வி.ஆா்.ஈஸ்வரன், ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, எம்எல்எஃப் மாவட்டச் செயலாளா் சக்திவேல், ஏஐசிசிடியூ மாநிலச் செயலாளா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.