செய்திகள் :

"பொறுத்தது போதும் பொங்கி எழு என வந்தேன்" - கொதித்த செல்லூர் ராஜூ

post image

"அண்ணா தோரண வாயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், மதுரையில் நக்கீரர் தோரண வாயிலை இடித்துள்ளனர்.." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சியின் 36 வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, "தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளெல்லாம் அரசிடமிருந்து சிறப்பு நிதிகளைப் பெற்று திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மதுரை மாநகராட்சி ஏன் பெறவில்லை? பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல மக்களின் கோரிக்கைகளைப் பேச இந்த மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மதுரை மாநகரில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் பிரசவத்திற்கு செல்லும் பெண்கள் வாகனத்திலேயே பிரசவிக்கும் நிலை உள்ளது.

மேயர் இந்திராணி

மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது அதன் நினைவாக கட்டப்பட்ட நக்கீரர் தோரண வாயில் இடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா தோரண வாயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் நக்கீரர் தோரண வாயிலை இடித்துள்ளனர்.

மதுரையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை மாநகராட்சி குப்பை மேடாக காட்சி அளிப்பதாக நீதிபதியே தெரிவித்துள்ளார்" என்ற அவர் பேசியபோது, குறுக்கிட்ட மேயர் இந்திராணி பொன் வசந்த் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்தார்.

செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "கோயில் மாநகரம் குப்பை நகரமாக காட்சியளிக்கிறது. என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது, மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது, வரி கட்டாதவர்களிடம் சாட்டையை சுழற்றி மேயர் வரிகளை வசூலிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உயரத்தில் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" என்றார்.

America: 'தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி; ட்ரம்ப், மஸ்க் ஆதரவு' - எங்கு, என்ன பதவி?

விவேக் ராமசாமி - தொழிலதிபர், இந்தியா வம்சாவளி, ட்ரம்ப் ஆதரவாளர், எலான் மஸ்க்கின் நண்பர்... என்பதையெல்லாம் தாண்டி இவருக்கு இனி புதிய வேறொரு அடையாளம் உருவாக வாய்ப்பு அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் ஓஹிய... மேலும் பார்க்க

``இந்தியா கூட்டணி என்பது சேதமடைந்த, பயன்படாத வண்டி!” – புதுச்சேரி அதிமுக கூறும் காரணமென்ன ?

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழக... மேலும் பார்க்க

Bihar: மக்கானா டு எதிர்க்கட்சிகள் அட்டாக் - 8 மாதங்களுக்கு முன்னே தேர்தல் வியூகத்தை தொடங்கிய மோடி

இந்த ஆண்டு இரண்டே மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான். அதில் ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல். அது நடந்து முடிந்து பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டு அந்... மேலும் பார்க்க

"திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை" - பாஜக-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்

நடிகை ரஞ்சனா நாச்சியார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "விடைபெறுகிறேன்... கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாரதிய ஜனதா கட்சி... மேலும் பார்க்க

Israel: ஹமாஸ் வீரருக்கு முத்தம் கொடுக்க காரணம் இதுதான் - இஸ்ரேல் பிணைக்கைதி சொல்வது என்ன?

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிப்ரவரி 22 அன்று 6 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒமர் ஷெம் தொவ் என்ற ஒரு நபர் இன்று உலகின் கவனத்தை ஈர்... மேலும் பார்க்க