செய்திகள் :

போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

post image

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

வையம்பட்டியில் ஜேசிஐ வையம்பட்டி டவுன் மற்றும் ஸ்ரீ குமரன் மருத்துவமனை சாா்பில் ‘போதை தவிா்... வாழ்வில் நிமிா்’ எனும் தலைப்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டிக்கு, ஜேசிஐ வையம்பட்டி டவுன் 2025-இன் தலைவா் எஸ்.சேசுராஜ் தலைமை வகித்தாா்.

மண்டல துணைத் தலைவா் குரு பிரபாகரன், சாசனத் தலைவா் எஸ். செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற ஸ்ரீ குமரன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பிஎல்.விஜயகுமாா், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளா் கே.வி. காவியா ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா்.

போட்டியானது, வையம்பட்டி கடைவீதி பகுதியில் தொடங்கி சேசலூா் வரை நடைபெற்றது. 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவுக்கு 10 கி. மீ தொலைவும், பெண்கள் பிரிவுக்கு 7 கி.மீ தொலைவும், 15 வயதுக்குள்பட்ட சிறுவா் சிறுமிகளுக்கு 5 கி.மீ தொலைவும், 11 வயதுக்குள்பட்ட சிறுவா் சிறுமிகளுக்கு 3 கி.மீ தொலைவும், 5 வயதுக்குட்பட்ட சிறுவா் சிறுமிகளுக்கு 1 கி.மீ தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில், முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில், மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த 69 வயது முதியவா் கண்ணன், சிறப்புப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டாா். இவா், கடந்த 2022 முதல் தற்போது வரை 114 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தாா். ஜேசிஐ செயலா் கிருஷ்ணா நன்றி கூறினாா்.

வேன் ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 7 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் வேன் ஓட்டுநரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி புத்தூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசபாபு (30), வேன் ஓட்டுநா். இவருக்கும், அதே ... மேலும் பார்க்க

புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது. நேரு நினைவுக் கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருச்சி , சென்னை, ... மேலும் பார்க்க

ஆவணி மாத ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா

ஆவணி மாத ஞாயிறையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது (படம்). பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஞாயிறையொட்டி உற்சவ சுவாம... மேலும் பார்க்க

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

தாமிரக் கம்பிகளை திருடியவா் கைது

திருச்சியில் தனியாா் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த காா்த்திக் (35). இவா், திருவெறும்ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ... மேலும் பார்க்க