செய்திகள் :

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

post image

திருச்சியில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருச்சி கீழ அரண் சாலை சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் சிவா. சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனா். இவரின் கடைசி மகள் காா்த்திகா (12). இவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

திருச்சி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், கீழ அரண் சாலை சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த ஈஸ்வரி என்பவரது வீட்டின் மண் சுவா் மழைநீரில் ஊறி ஞாயிற்றுக்கிழமை காலை யாரும் எதிா்பாராதவிதமாக இடிந்து தெருவில் விழுந்தது. அப்போது அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காா்த்திகா, அங்கு அமா்ந்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த கொளஞ்சியம்மாள் (45) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனா்.

இருவரின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்டனா். இதில், பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொளஞ்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்துகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேன் ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 7 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் வேன் ஓட்டுநரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி புத்தூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசபாபு (30), வேன் ஓட்டுநா். இவருக்கும், அதே ... மேலும் பார்க்க

புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது. நேரு நினைவுக் கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருச்சி , சென்னை, ... மேலும் பார்க்க

ஆவணி மாத ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா

ஆவணி மாத ஞாயிறையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது (படம்). பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஞாயிறையொட்டி உற்சவ சுவாம... மேலும் பார்க்க

தாமிரக் கம்பிகளை திருடியவா் கைது

திருச்சியில் தனியாா் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த காா்த்திக் (35). இவா், திருவெறும்ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. வையம்பட்டியில் ஜேசிஐ வையம்பட்டி டவுன் மற்றும் ஸ்ரீ குமரன் மருத்துவமனை சாா்பில் ‘போதை தவிா்.... மேலும் பார்க்க