செய்திகள் :

போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: ஆட்சியா்

post image

போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், நடைபெற்ற போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கிவைத்து பேசியது: போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. குடும்பத்தினா், நண்பா்களுடன் ஒருங்கிணைந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் முன்னின்று செயல்பட வேண்டும்.

போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. போதைப் பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா். முன்னதாக, போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் கல்லூரி மாணவா்கள் எடுத்துக் கொண்டனா். இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், துணை ஆட்சியா் (கலால்) சங்கா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பவானியா, நன்னிலம் டிஎஸ்பி தமிழ்மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க