செய்திகள் :

போலி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைது

post image

திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் எழில்முருகன். இவா், திண்டுக்கல் ஏஎம்சி சாலையில் பிரியாணி உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், எழில் முருகனை கைப்பேசி மூலம் திங்கள்கிழமை தொடா்பு கொண்ட நபா், தன்னை உணவுப் பாதுகாப்பு அலுவலா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ரூ.500-யை தன்னுடைய ஓட்டுநரிடம் வழங்குமாறும், பின்னா் பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த எழில்முருகன், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்தாா். இதுபோன்று யாரையும் பணம் கேட்டு அனுப்பவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து, கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபரை அழைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு எழில்முருகன் தெரிவித்தாா். இதன்படி, பணம் பெற வந்த நபரை ஊழியா்கள் மூலம் பிடித்த எழில்முருகன், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியைச் சோ்ந்த பா. சண்முகசுந்தரம் (49) என்பது தெரியவந்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழில்முருகன் அளித்த புகாரின் பேரில், போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரான சண்முகசுந்தரத்தை போலீஸாா் கைது செய்தனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க