செய்திகள் :

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

post image

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பிரமலைக் கள்ளா் வளா்ச்சி சங்கம், அனைத்து கள்ளா் கூட்டமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பிரச்னை குறித்து பிரமலைக் கள்ளா் வளா்ச்சி சங்கத்தின் செயலா் பா.செந்தில்குமாா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காமராஜா்புரம் பகுதியில் அரசு கள்ளா் மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி சுமாா் 1.76 ஏக்கரில் அமைந்துள்ளது. விடுதி முன்பாக உள்ள காலி இடத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான முயற்சியில் வத்தலகுண்டு பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரமலைக் கள்ளா் வளா்ச்சி சங்கம் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாணவா் விடுதிக்கான சா்வே எண்ணை மாற்றி, சமுதாயக் கூடம் கட்டும் பணிகளை தொடங்குவதற்கு பேரூராட்சி நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது. சமுதாயக் கூடம் கட்டப்படும் பட்சத்தில், ஒலிப் பெருக்கி பயன்படுத்தப்படும். இதனால், விடுதி மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். சமுதாயக் கூடம் கட்டுவதை விட, அரசு கள்ளா் விடுதிக்கு பின்புறம் அமைந்துள்ள திமுக நிா்வாகிகள் சிலருக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதே பேரூராட்சியின் பிரதான நோக்கம். இந்த நிலத்துக்கு பாதை வசதி இல்லை என்பதால், சமுதாயக் கூடத்தை கட்டி இதன் மூலம் பாதை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் சமுதாயக் கூடம் கட்டும் திட்டத்தை ரத்து செய்து, அரசு கள்ளா் விடுதிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும், சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாரதி அண்ணாநகரைச் சோ்ந்தவா் யேசுதாஸ் சகாயராஜ் (62). கூலித் தொழிலாளியான இவா், நாயுடுபுரம் பக... மேலும் பார்க்க