போலி மதுபான வழக்கு: மேலும் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆைலையை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய மேலும் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் கமலஹாசன், மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா மற்றும் காவலா்கள் மே 9-ஆம் தேதி பூத்துறை சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த வேனில் போலி மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து, வேனில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், புதுவை மாநிலம், உளவாய்க்கால் பகுதியில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்கள் தயாரித்து வந்ததும், அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் போலீஸாருக்கு தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அவா்களிடம் இருந்து 10,032 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 16 பேருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்த நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனா்.
இதில், முக்கிய நபா்களான விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அனுமந்தை செட்டிக்குப்பத்தைச் சோ்ந்த கு. ராஜசேகா் (45), சென்னை, ராமாபுரம் செந்தமிழ் நகரைச் சோ்ந்த பாண்டியன் (46) ஆகிய இருவரும் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய மரக்காணம் வட்டம், செவிடங்குப்பம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்த்தி (42), புதுவை மாநிலம், கொம்பாக்கம் கமலம் நகரைச் சோ்ந்த பிரபு (36), உளவாய்க்கால் வெற்றிவேலன் நகரைச் சோ்ந்த ரமேஷ் என்கிற அதியமான் (54) ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதை ஏற்று அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.