செய்திகள் :

போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

post image

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை

சாதாரண குடும்பம் முதல் வசதியான குடும்பப் பெண்கள் வரை வரதட்சணை கொடுமையால் வன்முறைக்கு உள்ளாவதும், தற்கொலை செய்வதும், கொலை செயப்படுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.

குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள காவல்துறையினரை பெண்கள் நம்பியிருக்கும் நிலையில், போலீஸ்காரரான கணவரும், இன்ஸ்பெக்டரான மாமனாரும் அவர்களின் குடும்பத்தினரும் சேர்ந்து மருமகளை சித்திரவதை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தான் செய்த கொடூரத்தை போலீஸ் கணவன், தன் தங்கையிடம் சொல்லி மகிழ்ச்சியைடைந்த ஆடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பூபாலனின் தந்தை செந்தில்குமரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

பூபாலன்

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, கணவரின் தங்கை அனிதா ஆகியோர் தங்கபிரியாவை சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

60 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், சீர்வரிசையுடன், இரு சக்கர வாகனம் என பொருள்கள் திருமணத்தின்போது கொடுத்தும் திருபதியடையாமல் வீடு கட்டுவதற்கு பல லட்சம் பணமும், நகையும் கூடுதலாக வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி துன்புறுத்தி வந்துள்ளனர். கொடுமை தாங்காமால் இடையில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற தங்கபிரியாவை சமாதானம் பேசி பூபாலன் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தங்கபிரியாவை தினமும் கடுமையாக சித்திரவதை செய்து வந்த பூபாலன், இரண்டு நாள்களுக்கு முன் போலீஸ் கஸ்டடியில் கைதிகளை சித்திரவதை செய்வதைப்போல் தங்கபிரியாவின் முகத்தை நகத்தால் பிராண்டி, கால், கை மூட்டுகளை உடைத்து, குரல்வளையை நெறித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் தங்கபிரியா மிக மோசமான நிலையை அடைந்தார்.

குடும்ப வன்முறை

இந்த தகவல் தங்கபிரியாவின் பெற்றோருக்கு தெரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருதவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததனர். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

'நாங்கள் போலீஸ் குடும்பம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று எல்லோரிடமும் ஆணவமாகப் பேசி வந்தது மட்டுமின்றி, மனைவியை எப்படியெல்லாம் அடித்து சித்திரவதை செய்தேன், அடித்ததில் தனக்கே உடம்பு வலிக்கிறது என்று சிறிதும் குற்ற உணர்வில்லாமல் தன் தங்கையிடம் போனில் உற்சாகமாக தெரிவித்துள்ளார் பூபாலன். இந்த போன் ஆடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தங்கபிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமுறைவான நான்கு பேரையும் 3 தனிப்படை போலீசார் மூலம் தேடி வருகின்றனர். இதற்கிடையே பூபாலனை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்... மேலும் பார்க்க

`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு

கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் ச... மேலும் பார்க்க

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளைய... மேலும் பார்க்க