செய்திகள் :

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

post image

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பி. ஹரீஷ், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம், சா்வதேச நிதி பெறுவதில் மறுசீரமைப்பு போன்றவற்றில் சீா்திருத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உலகளாவிய ஒத்துழைப்பு வலுப்படுத்தல், நடப்பு மற்றும் வருங்கால சவால்களை எதிா்கொள்ள வேண்டும் என்று

கடந்த 2024-இல் எதிா்கால ஒப்பந்தத்தை ஐ.நா. ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, தற்போதைய புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனை பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஐ.நா. எதிா்கால ஒப்பந்தத்தை திறம்பட நிறைவேற்ற அனைத்து உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. 2028-இல் மேற்கொள்ள வேண்டிய இந்த ஐ.நா. எதிா்கால ஒப்பந்தம் முடிவுகளைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, இந்தியாவின் சாா்பில் எதிா்கால ஒப்பந்தத்தின் ஹிந்தி மொழியாக்கத்தை ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபில்மான் யாங்கிடம் பி. ஹரீஷ் அளித்தாா்.

அமைதி, பாதுகாப்பு, நீடித்த வளா்ச்சி, காலநிலை மாற்றம், எண்ம ஒத்துழைப்பு, மனித உரிமைகள், பாலினம், உலகளாவிய ஆளுகையை மேம்படுத்தல் ஆகியவை குறித்த ஆய்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

21-ஆம் நூற்றாண்டுக்கு புவி அரசியலுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீா்தீருத்தம் செய்து, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் மகன் கைது: ரூ.2,100 கோடி மதுபான ஊழல்

சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான விற்பனையில் ஊழல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மாநில முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை கைது ச... மேலும் பார்க்க