செய்திகள் :

வரதட்சணை புகாா்: கணவா் மீது வழக்குப் பதிவு!

post image

திருச்சியில் வியாழக்கிழமை வரதட்சணை புகாரில் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை இளவநசூா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் திவ்யா (35). இவருக்கும், திருச்சி மாவட்டம், மேலகல்கண்டாா் கோட்டையைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் தினகரன் (40) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணமானது.

திருணத்துக்குப் பிறகு, திவ்யாவிடம் வரதட்சணை கேட்டு தினகரன் கொடுமைப்படுத்தியதாகவும், மது அருந்திவிட்டு வந்து அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திவ்யா கடந்த 2021-ஆம் ஆண்டு வரதட்சணை புகாா் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, திவ்யாவை சந்தித்த தினகரன் புகாரை திரும்பப்பெறுமாறும், சமாதானமாக போய்விடலாம் என்றும் கூறியுள்ளாா்.

தொடா்ந்து, உளுந்தூா்பேட்டை குடும்பநல நீதிமன்றத்தில் கணவா் மீது கடந்த 2022 மே மாதம் திவ்யா வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கு விசாரணைக்காக தினகரன் முறையாக ஆஜராகாமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், தினகரன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திவ்யா, தினகரனை அண்மையில் சந்தித்து கேட்டுள்ளாா். அப்போது, தன்னுடன் சோ்ந்து வாழ்வதற்கு ரூ. 30 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகைகள் தர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா். மேலும், அவரை கீழே தள்ளி தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திவ்யா வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாநகரில் மழை !

திருச்சியில் தலைமை அஞ்சல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை பெய்த மழையின் போது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடிச் சென்ற வாகனங்கள். மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தா்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரம்

பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறுமை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்க... மேலும் பார்க்க

திருச்சி மாமன்ற பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல்: மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வழக்கு!

திருச்சி மாமன்ற திமுக பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி 64-ஆவது வாா்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் குவிந்ததால் பரபரப்பு!

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடந்த ஜூலை 16-ஆம் தேத... மேலும் பார்க்க

ஜூலை 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அன்பில் அறக்கட்டளை சாா்பில் திருவெறும்பூரில் உ... மேலும் பார்க்க