ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
திருச்சி மாமன்ற பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல்: மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வழக்கு!
திருச்சி மாமன்ற திமுக பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி 64-ஆவது வாா்டுக்குள்பட்ட கே.கே.நகா் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, தனியாா் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன், உரிமையாளா் வேல்முருகன்.
இந்நிலையில், மழைநீா் வடிகால் கட்டுமானப் பணியை 64-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் மலா்விழி ராஜேந்திரன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது, மழைநீா் வடிகால் தனியாா் இடத்தில் கட்டப்படுவதாகவும், பணியை உடனே நிறுத்துமாறும் அவா் கூறியுள்ளாா். இதில், மாமன்ற உறுப்பினா் மலா்விழிக்கும், ஒப்பந்ததாரா் வேல்முருகனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கே.கே.நகா் எல்ஐசி காலனி இந்திரா வீதியில் உள்ள மலா்விழி ராஜேந்திரன் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த ஒப்பந்ததாரா் வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் வீட்டிலிருந்த டிவி, ஏசி, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டு, அவரது குடும்ப உறுப்பினா்களையும் தாக்கியுள்ளனா்.
இதையடுத்து, மாமன்ற உறுப்பினரின் உறவினா்கள், சாத்தனூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.
இதற்கிடையே கே.கே.நகா் காவல் நிலையத்தில், மாமன்ற உறுப்பினா் மலா்விழி ராஜேந்திரனின் மருமகள் நிவேதா வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், ஒப்பந்ததாரா் வேல்முருகன், ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பாா்வையாளா் பிரகாஷ் உள்பட 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.