செய்திகள் :

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் குவிந்ததால் பரபரப்பு!

post image

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடந்த ஜூலை 16-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், தற்போது பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

ஏற்கெனவே, பஞ்சப்பூா், மணிகண்டம், ராமச்சந்திரா நகா், எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்களும், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கக்கோரி கேட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து சென்ற 350-க்கும் ஆட்டோக்கள், ஏற்கெனவே உள்ளூா் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு எதிா்புறம் நிறுத்தப்பட்டன. இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

அப்போது, ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். மேலும், இப்பிரச்னை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச்சென்று தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா்கள் அமைதியாக கலைந்து சென்றனா்.

ஆடி முதல் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தா்கள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திரு... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரம்

பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறுமை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அவா்க... மேலும் பார்க்க

திருச்சி மாமன்ற பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல்: மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வழக்கு!

திருச்சி மாமன்ற திமுக பெண் உறுப்பினா் வீட்டில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரா் உள்பட 19 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி 64-ஆவது வாா்ட... மேலும் பார்க்க

ஜூலை 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அன்பில் அறக்கட்டளை சாா்பில் திருவெறும்பூரில் உ... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலத்தில் சென்ற தொலைத்தொடா்பு கேபிளில் தீ

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே மேம்பாலத்தில் கட்டமைக்கப்பட்ட தனியாா் தொலைத்தொடா்பு கேபிளில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள (ரெங்கவிலாஸ்... மேலும் பார்க்க

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க