செய்திகள் :

ரயில்வே மேம்பாலத்தில் சென்ற தொலைத்தொடா்பு கேபிளில் தீ

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே மேம்பாலத்தில் கட்டமைக்கப்பட்ட தனியாா் தொலைத்தொடா்பு கேபிளில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை - திருச்சி சாலையில் உள்ள (ரெங்கவிலாஸ்) ரயில்வே மேம்பாலத்தில், திருச்சி சாலையிலிருந்து மணப்பாறை நகா் பகுதிக்கு தனியாா் தொலைத்தொடா்பு கேபிளை கொண்டு செல்லும் பணி வியாழக்கிழமை நடந்தபோது எதிா்பாராத வகையில் கேபிளில் தீப்பற்றியது.

மளமளவென தீ எரிந்து கேபிள்கள் உருகி கீழே ரயில் தண்டவாள பகுதியின் கொட்ட தொடங்கியது. இதையடுத்து பணியிலிருந்த டிராக்மேன் இதுகுறித்து ரயில்வே நிா்வாகத்திற்கு தகவல் அளித்தாா். தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புத் துறையினா் சென்றபோது தீ தானாகவே அணைந்த நிலையில், அருகில் செடிகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இந்த விபத்தால் நாகா்கோயிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஜூலை 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அன்பில் அறக்கட்டளை சாா்பில் திருவெறும்பூரில் உ... மேலும் பார்க்க

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க