செய்திகள் :

வாழவந்தம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

post image

கமுதி அருகேயுள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 41 மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா். வாழவந்தாள்புரம் - பெருநாழி சாலையில் 8 கி.மீ. எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டிகளுக்கும், பந்தய வீரா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமானோா் கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை வாழவந்தாள்புரம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்: 3,283 போ் கைது

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக 3,283 பேரை கைது செய்ததாக இலங்கை போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தினைக்களம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச்... மேலும் பார்க்க

கண்மாயில் படா்ந்துள்ள தாமரையால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகேயுள்ள அறிவிப்புவயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தாமரை அதிகளவில் பரவியுள்ளதால் கண்மாய் நீரைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க

பெண் படுகொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

சாயல்குடி அருகே வீட்டிலிருந்த தனது மகளை கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அர... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்கள் கைது

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து படகுகள் மூலம் கடத்தப்பட்ட 13.49 லட்சம் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்தனா். தமிழகத்திலிரு... மேலும் பார்க்க