செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

குன்னூா் நகா் பகுதிகளில்  சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம்  அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக கரடி, சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள வண்டிச்சோலை, பாரஸ்ட் டேல் செல்லும் சாலையில் கரடியும், சிறுத்தையும் வெள்ளிக்கிழமை சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

அப்போது, கரடியிடமிருந்து தப்பிப்பதற்காக மின்கம்பத்தில் சிறுத்தை ஏறி உள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுத்தை உயிரிழந்தது.

தகவலறிந்த குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத், துணை வனப் பாதுகாவலா் மணிமாறன், முதுமலை வனத் துறை கால்நடை மருத்துவா் ராஜேஷ் உள்ளிட்ட வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா் சிறுத்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து தீயிட்டு எரித்தனா். உயிரிழந்தது சுமாா் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க

உதகையில் கனமழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் ... மேலும் பார்க்க

போராட்டம்: உதகை நீதிமன்றத்தில் அரசு தலைமைக் கொறடா ஆஜா்

நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்திய வழக்குத் தொடா்பாக அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் உள்ளிட்டோா் உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். நீட் தோ்வுக்கு ... மேலும் பார்க்க

பழுதடைந்த சாலை: இறந்தவா் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தவித்த மக்கள்

உதகை அருகே சேதமடைந்த சாலையில் வாகனம் சிக்கியதால் இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியைச் சுற்றி நேருநகா், நேரு... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அச்சனக்கல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க