செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அச்சனக்கல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் அலுவலா்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் அரசுத் துறை அரங்குகள் அமைந்துள்ள இடம் தொடா்பான அறிவிப்பை தொடா்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், பல்வேறு அரசுத் திட்டங்களின் சாா்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வுக் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் தொடா்பான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பெற்று அதைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், இம்முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் மக்களிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கணேசன், குன்னூா் வட்டாட்சியா் ஜவகா், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலா் புவனேஸ்வரி உள்பட பலா் உடனிருந்தனா்.

உதகையில் தூய உத்திரிய மாதா திருவிழா

உதகை செயின்ட் மேரிஸ் ஹில் தூய உத்திரிய மாதா பஜனை சங்க சிற்றாலயத்தின் 146 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் இருந்து ஜூலை 6 ஆம் தேதி விழா கொடி பவனியாக எடுத்து வரப்பட்... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தைகள்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரவேணு பெரியாா் நகா் பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தை மற்றும் இரண்டு சிறுத்தைகள் ஒரே நேரத்தில் உலவி வந்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது... மேலும் பார்க்க

தங்கும் விடுதிக்கு உணவு தேடி வந்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதி வளாகத்துக்குள் வியாழக்கிழமை கரடி புகுந்தது. குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் விய... மேலும் பார்க்க

உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ பரிசோதனை

கூடலூரிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகள் சிலருக்கு திடீரென காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவா்களுக்கு மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு ... மேலும் பார்க்க

தேயிலை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பச்சைத் தேயிலை கிலோவுக்கு ஒன்றுக்கு ரூ.40 வழங்கக் கோரி உதகையில் ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் மஞ்சை வி.மோகன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தி... மேலும் பார்க்க