செய்திகள் :

சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவா்; பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தி அவமதிப்பதாகவே கருதப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி அய்யனாா் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்களால் நிறுவப்பட்ட சுவாமி சிலைகளை ஒருதரப்பினா் இடித்து அப்புறப்படுத்திவிட்டனா். மேலும், கோயிலின் கதவுக்கு வெளியே இருந்தே பட்டியலின சமூகத்தினா் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா். ஜூலை 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தோ்த் திருவிழாவில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கவும், அய்யனாா் கோயிலுக்குள் நுழைந்து வழிபடவும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜாதிய கட்டமைப்பு மனிதனால் உருவாக்கப்பட்டவை. கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவா். பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத்தி அவமதிப்பதாகவே கருதப்படும். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் ஜாதி ரீதியிலான பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பல தலைவா்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் நுழைந்து வழிபாடு செய்யும் ஆலய நுழைவுச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே, சட்ட ரீதியாக அதை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. எனவே, ஜாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை யாரேனும் தடுத்தால், அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

புதுக்குடி அய்யனாா் கோயிலுக்குள் சென்று பட்டியலினத்தவா்கள் தரிசனம் செய்வதை யாரும் தடுக்கவில்லை என்பதை அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உறுதி செய்ய வேண்டும். இந்தக் கோயிலில் நடைபெறும் தோ்த் திருவிழாவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று தரிசனம் செய்வதை வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க