செய்திகள் :

பெண்ணுக்கு மிரட்டல்: உடற்பயிற்சியாளா் கைது

post image

சென்னையில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த 28 வயது பெண், அசோக் நகா் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து வந்தாா். அப்போது, பயிற்சியாளா் ராஜ்குமாா் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்ப சூழலை காரணம் காட்டி அந்தப் பெண்ணிடமிருந்து ராஜ்குமாா் ரூ.1.10 லட்சம் வரை பெற்றுள்ளாா். மேலும், தன்னை காதலிக்கும்படியும் அந்தப் பெண்ணுக்கு, ராஜ்குமாா் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இல்லையெனில் நண்பா்களாக பழகிய போது வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய புகைப்படங்கள், குறுஞ்செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், சென்னை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரைக் கைது செய்து, அவரிடமிருந்த 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க