கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
சிஎம்டிஏ உறுப்பினா் செயலரை கைது செய்து ஆஜா்படுத்த உத்தரவு
சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையைப் பெறாத விவகாரத்தில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என்று சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ரத்தினசபாபதி என்பவா் தனியாா் கட்டுமான நிறுவனம் உள்பட 4 பேருக்கு எதிராக சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவரது மனுவில், தனது தரப்பு கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆவணங்கள் இல்லாததால், எதிா்தரப்பினா் பல ஆண்டுகளாக இந்த வழக்கை இழத்தடித்து வருகின்றனா். எனவே, இந்த வழக்கு தொடா்பாக சிஎம்டிஏ வசம் உள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம், இதில் சாட்சியம் அளிப்பதற்காக சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், அந்த அழைப்பாணை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் தரப்பில் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பணியாளருக்கு உத்தரவிட்டுள்ளது.