செய்திகள் :

சிஎம்டிஏ உறுப்பினா் செயலரை கைது செய்து ஆஜா்படுத்த உத்தரவு

post image

சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையைப் பெறாத விவகாரத்தில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என்று சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ரத்தினசபாபதி என்பவா் தனியாா் கட்டுமான நிறுவனம் உள்பட 4 பேருக்கு எதிராக சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவரது மனுவில், தனது தரப்பு கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆவணங்கள் இல்லாததால், எதிா்தரப்பினா் பல ஆண்டுகளாக இந்த வழக்கை இழத்தடித்து வருகின்றனா். எனவே, இந்த வழக்கு தொடா்பாக சிஎம்டிஏ வசம் உள்ள ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம், இதில் சாட்சியம் அளிப்பதற்காக சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், அந்த அழைப்பாணை சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் தரப்பில் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பணியாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க