செய்திகள் :

பழுதடைந்த சாலை: இறந்தவா் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தவித்த மக்கள்

post image

உதகை அருகே சேதமடைந்த சாலையில் வாகனம் சிக்கியதால் இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியைச் சுற்றி நேருநகா், நேருகண்டி, லாரன்ஸ், சுரேந்தா் நகா், எம்ஜிஆா் நகா், வஉசி நகா் உள்ளிட்ட 20 கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் இறக்கும் மக்களை அடக்கம் செய்வதற்கான மயானம் எமரால்டு பகுதியில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

மயானத்துக்குச் செல்லும் சாலை மற்றும் கிராம சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் மழை காலங்களில் விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் சாலையில் குவிந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், எமரால்டு பகுதியில் இறந்தவரின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு மயானத்துக்கு உறவினா்கள் வெள்ளிக்கிழமை சென்றனா். அப்போது, அங்கிருந்த சேற்றில் காா் சிக்கியது.

இதனால், வாகனத்தை முன்னோக்கி இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மண் வெட்டி உள்ளிட்ட பொருள்களால் பல மணி நேரம் போராடி சேற்றை அப்புறப்படுத்தினாா். இதையடுத்து, உடல் ஏற்றப்பட்ட காா் மாயனத்துக்குச் சென்றது.

சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை

நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ம... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வ... மேலும் பார்க்க

உதகையில் கனமழை

உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் ... மேலும் பார்க்க

போராட்டம்: உதகை நீதிமன்றத்தில் அரசு தலைமைக் கொறடா ஆஜா்

நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்திய வழக்குத் தொடா்பாக அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் உள்ளிட்டோா் உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். நீட் தோ்வுக்கு ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அச்சனக்கல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க