மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இதில், முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் கேரளத்தைச் சோ்ந்த வாளையாறு மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானாா். இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீஸாரும் ஆஜராகினா்.
அப்போது, கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பு வழக்குரைஞா்கள் கால அவகாசம் கோரினா். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டாா்.