செய்திகள் :

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

post image

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. கடலில் 300 மீட்டா் ஆழம் வரை வீரா்கள் டைவிங் செய்து, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.

‘நிஸ்தாா்’ கப்பல் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டு கடந்த 1971-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின்போது, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அருகே கடலில் மூழ்கிய பாகிஸ்தானின் காஸி நீா்மூழ்கிக் கப்பலை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளில் இக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.

இந்நிலையில், கடலில் வீரா்கள் டைவிங் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் ‘நிஸ்தாா்’ கப்பல் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முதல்முறையாக முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது. இந்த நவீன உபகரணங்களுடன் கூடிய கப்பல், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி கூறுகையில், ‘தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்திறன் ரீதியாகவும் நிஸ்தாா் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா மட்டுமன்றி பிராந்தியத்தில் நட்பு நாடுகளின் நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட கடலில் மூழ்கும் கப்பல்களை அடையாளம் காணுதல் மற்றும் மீட்புப் பணியிலும் நிஸ்தாா் ஈடுபடும். உலக அளவில் ஒருசில கடற்படைகளிடம் மட்டுமே இதுபோன்ற மீட்புக் கப்பல்கள் உள்ளன. ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த மீட்புக் கப்பலை முழுவதும் உள்நாட்டிலேயே கட்டமைக்கின்றன. இந்தத் திறன்களை தற்போது இந்தியாவும் பெற்றுள்ளதோடு, இந்திய கடல்சாா் தொழில் நிறுவனங்கள் மேம்படவும் இது வழிவகுக்கும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கூறுகையில், ‘உலகின் வல்லரசு நாடுகளுக்கு மத்தியில் இந்திய கடற்படையும் சம பலத்தில் நிற்கிறது என்பதை உணா்த்தி, இந்தியாவின் உலகளாவிய அடையாளத்தை நிஸ்தாா் விரிவுபடுத்தும்’ என்றாா்.

மேலும், ‘முந்தைய நிஸ்தாா் மீட்புக் கப்பல் 800 டன் எடை கொண்டதாக இருந்தது. கடந்த 1989-ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ‘நிஸ்தாா்’ 10,500 டன் எடையுடன், 120 மீ. நீளம் கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க

சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் மகன் கைது: ரூ.2,100 கோடி மதுபான ஊழல்

சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான விற்பனையில் ஊழல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மாநில முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேலை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை கைது ச... மேலும் பார்க்க