செய்திகள் :

மோசடியாக சிம் காா்டு வாங்கிய வழக்கு: மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிறை!

post image

வேறு ஒருவரின் முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி சிம்காா்டு வாங்கி பயன்படுத்திய மாவோயிஸ்ட் தலைவா் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், பெரிங்கோட்டுகுரா பகுதியைச் சோ்ந்தவா் ரூபேஷ் என்ற பிரவீன் (64). இவா் அரசால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவராக இருந்தாா். இவா் மீது தமிழகத்தில் கோவை, ஈரோடு , திருப்பூா், மதுரை உள்பட பல்வேறு இடங்களில் 15 -க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ஆம் ஆண்டு, ரூபேஷை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய சோதனையில் ஏராளமான சிம் காா்டுகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பான விசாரணையில், ஒரு சிம் காா்டை சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள இடையன்வயல் பகுதியைச் சோ்ந்த நேரு என்பவரது முகவரியைப் பயன்படுத்தி கன்னியாகுமரியில் வாங்கியது தெரிய வந்தது.

அந்த சிம் காா்டு மூலமாக ரூபேஷ் , மாவோயிஸ்ட் இயக்கம் தொடா்பான பல்வேறு தகவல்களை பரிமாறியுள்ளாா். இதைத்தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு போலீஸாா் ரூபேஷ் மீது கடந்த 2015 -ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வழக்குப் பதிவு செய்தனா்.

அவா் மீதான வழக்கு, சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையாகி வாதாடினாா்.

இந்த நிலையில், வேறு ஒரு வழக்கில் தண்டனை பெற்று தற்போது கேரள மாநிலத்தில் திருச்சூரைஅடுத்த வையூா் சிறையில் அடைக்கப்பட்ட ரூபேஷ், கேரள மாநில போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமா்வு நீதிபதி கே.அறிவொளி, குற்றஞ்சாட்டப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத் தலைவா் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 31 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்... மேலும் பார்க்க

திட்டப் பணிகளைப் பெறுவதில் காங். - திமுகவினரிடையே மோதல்: ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளைப் பெறுவதில் வெள்ளிக்கிழமை திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவன... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வாராப்பூா் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 217 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிங்கம்புணரி மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்த... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு திமுக இளைஞரணி சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருப்புவனம் பழையூரில் நடைபெற்ற பொதுக் ... மேலும் பார்க்க