செய்திகள் :

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சண்முகநாதன் அவரது வீட்டில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அவரது மனைவி தனலட்சுமி பனையப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்ற பனையப்பட்டி காவல் நிலைய போலீஸார் இறந்து கிடந்த சண்முகநாதன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு நடைப்பெற்ற உடற்கூராய்வு அறிக்கையில் சண்முகநாதன் கொலை செய்யப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி தனலட்சுமி (வயது: 45) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் கிடுக்கிப்பிடி குறுக்கு விசாரணை நடத்தினர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனலட்சுமிக்கு சண்முகநாதன் குடித்துவிட்டு தினமும் செக்ஸ் டார்ச்சர் மற்றும் உடல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரியவந்தது.

accused

அதோடு, இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி அவரை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, இறந்து கிடப்பதாக போலீஸில் புகார் செய்துள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, தனலட்சுமி தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, குற்றவாளி தனலட்சுமியை பனையப்பட்டி போலீஸார் கைது செய்தனர். மதுபோதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆத்திரத்தில் அவரது மனைவியே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரதட்சணை கொடுமைசாதாரண குடும்பம் முதல் வசதியான கு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சென்னை: கழிவறைக்குச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைதான பின்னணி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கார்டனில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். இவரின் கணவர் அந்தக் கார்டனில் வேலை செய்து வருகிறார். சம்... மேலும் பார்க்க

`வாரிசில்லாத தம்பதி நிலம்; போலி ஆவணம் மூலம் கிரையம்?' - முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்கு

கரூர் மாவட்டம், நெடுங்கூர் என்.பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு குழந்தையில்லை. இந்நிலையில், தங்கவேலுக்கும், பா.ஜ.க கரூர் மாவட்ட முன்னாள் தலைவர் ச... மேலும் பார்க்க

நாமக்கல்: பல ஆண்டுகளாக நடைபெறும் கிட்னி விற்பனை; தலைமறைவாக உள்ள புரோக்கருக்கு வலை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் தொழிலாளிகளைப் குறிவைத்து கிட்னி விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளிப்பாளையம், குமாரபாளைய... மேலும் பார்க்க