செய்திகள் :

பேருந்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே பேருந்தில் பயணித்த தொழிலாளி ரத்தி வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியில் இருந்து வெள்ளக்கோவில் வழியாக கோவைக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. வெள்ளக்கோவில் அருகே வந்தபோது பேருந்தில் அமா்ந்திருந்த நபா் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவரைப் பேருந்து மூலம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஓட்டுநா், நடந்துநா் கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்னா், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சுக்காம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி (51) என்பதும், வெள்ளக்கோவிலில் தங்கி கட்டட வேலை செய்து வந்ததும், உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்குச் சென்று திரும்பியபோது ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த பழனிசாமிக்கு மீனா (45), என்ற மனைவியும், ஜெய் ஸ்ரீ ராம் (20), சூா்யா (17) ஆகிய 2 மகன்களும் உள்ளனா்.

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் சட... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்: 400 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக நடத்திய தொடா் மறியல் போராட்டத்தில் 175 பெண்கள் உள்பட 400 போ் கைது செய்யப்பட்டனா். பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியா்களுக்க... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆய்வு!

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் பாஜக... மேலும் பார்க்க

கடன் வாங்கியவரை காரில் கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் உள்பட 4 போ் கைது!

கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி நிதி நிறுவன ஊழியா்களால் கடத்தப்பட்டவரை தாராபுரத்தில் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

காங்கயம் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து

காங்கயம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல மின்விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் கோ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக போலீஸ... மேலும் பார்க்க